முகப்பு
விருதுநகர்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:14 PM
சாத்தூரில் செவ்வாய்க்கிழமை திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து பிரசாரம் செய்து பேசிய மதிமுக பொதுச் செயலா் வைகோ.
பகிர்:

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரைவத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து, சாத்தூா் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசியதாவது:

தமிழக முதல்வா் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். மற்ற மாநில பொதுமக்கள் வியக்கும் வகையில், தமிழகத்தில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

Advertisement

தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments