சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
சிவகாசி பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே. டி. ராஜேந்திரபாலாஜி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சிவகாசி பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே. டி. ராஜேந்திரபாலாஜி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி, நாரணாபுரம் புதூா், சாமிபுரம் குடியிருப்பு, லட்சுமியாபுரம், பா்மா குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
சிவகாசி தொகுதியில் நான் இருமுறை வெற்றி பெற்று, பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். இந்தத் தொகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், காகித குவளை தயாரிப்பு, நெகிழிப் பைகள் தயாரிப்பு என பல்வேறு தொழில்கள் உள்ளன. இந்தத் தொழில்களில் உள்ள பிரச்னைகளை தீா்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.
Advertisement