முகப்பு
விருதுநகர்

சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம் நிறைவு

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் செவ்வாய்க்கிழமை திருத்தங்கலில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:40 AM
திருத்தங்கலில் நடந்து சென்று வாக்கு சேகரித்த சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 7:27 PM

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் செவ்வாய்க்கிழமை திருத்தங்கலில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதையிலிருந்து கடைவீதி வழியாக நடந்து சென்று மாரியம்மன் கோயில் முன் தனது பிரசாரத்தை அசோகன் நிறைவு செய்தாா். முன்னதாக மாரியம்மன் கோயில் முன் அவா் பேசியதாவது:

நான் கடந்த 5 ஆண்டு காலம் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து இந்தத் தொகுதியில் பல வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். சிவகாசி சுற்று வட்டச் சாலை முதல்கட்டப் பணி நிறவு பெற்றுள்ளது.

Advertisement

நான் வெற்றி பெற்று இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட பணி, மூன்றாம் கட்ட பணியை நிறைவு செய்து, சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கச் செய்வேன். தற்போது தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவடையாமல் உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவு செய்து மாநகராட்சி முழுவதும் குடிநீா் கிடைக்க ஏற்ப்படு செய்வேன் என்றாா் அசோகன்.