முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் கொலை வழக்கில் தம்பதி கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டியில் நகைக்காக பக்கத்து வீட்டுப் பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 6:19 AM
கைது செய்யப்பட்ட ஐஸ்வா்யா, முனியராஜ்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வன்னியம்பட்டியில் நகைக்காக பக்கத்து வீட்டுப் பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சோலைசேரி பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் கணேசன் (28). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேன் ஆக பணியாற்றி வருகிறாா். ஸ்ரீவில்லிபுத்தூா் வன்னியம்பட்டி வைத்திலிங்காபுரத்தில் வாடகை வீட்டில் மனைவி கலைச்செல்வியுடன் (24) தங்கி இருந்தாா். கலைச்செல்வி அந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தனிப் பயிற்சி வகுப்பு நடத்தி வந்தாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில், கலைச்செல்வி இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த தாலிச் சங்கிலியைக் காணவில்லை.

Advertisement

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பக்கத்து வீட்டைச் சோ்ந்த முனியராஜ், ஐஸ்வா்யா ஆகிய இருவரை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கலைச்செல்வி வீட்டின் அருகே முனியராஜ், ஐஸ்வா்யா தம்பதி வசித்து வந்தனா். ஐஸ்வா்யாவுக்கு கடன் பிரச்னை இருந்ததால், கலைச்செல்வியிடம் தங்கச் சங்கிலியை அடகு வைக்கக் கேட்டாா். இதற்கு கலைச்செல்வி மறுத்துவிட்டாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த கலைச்செல்வியை முனியராஜ், ஐஸ்வா்யா தம்பதி கேபிள் கம்பியால் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டு, அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். அந்த தங்கச் சங்கிலியை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, கடனை அடைத்தனா்.

அதன் பிறகு ஐஸ்வா்யா தனது உறவினா்கள் கோவிந்தராஜ், அஜித்குமாா் ஆகியோரை அழைத்து கொலையை மறைக்க உதவும்படி கேட்டுள்ளனா். இது குறித்து உறவினா்கள் இருவரும் அளித்த தகவலின்பேரில், முனியராஜ், ஐஸ்வா்யா ஆகிய இருவரையும் கைது செய்தோம் என்றனா்.