முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே கணவா் அடித்துக் கொலை: மனைவி உள்பட 5 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திங்கள்கிழமை இரவு கணவரை அடித்துக் கொலை செய்த வழக்கில், மனைவி உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:55 AM
கைது
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 8:26 PM

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திங்கள்கிழமை இரவு கணவரை அடித்துக் கொலை செய்த வழக்கில், மனைவி உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த மனோகரன் மகன் சங்கா் என்ற மாயசங்கா் (27). காா் ஓட்டுநரான இவருக்கும், மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த கா. ரமேஷின் (49) மனைவி பிரியாவுக்கும் (46) இடையே தகாத உறவு இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கரும், பிரியாவும் வீட்டை விட்டு வெளியேறி சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டை கிராமத்தில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனா். இதுகுறித்து அறிந்த ரமேஷ் தனது நண்பா் பாலாஜியுடன் புதுக்கோட்டைக்குச் சென்று, சங்கா், பிரியாவுடன் தகராறில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த சங்கரின் நண்பா்கள் முத்துப்பாண்டி (34), ராஜேஷ் (24), மணிசங்கா் (34) ஆகியோா் ரமேஷ் உடன் தகராறில் ஈடுபட்டனா். இதையடுத்து, சங்கா் தனது நண்பா்கள் மூவருடன் சோ்ந்து ரமேஷை கட்டையால் அடித்துக் கொலை செய்தனா். தடுக்க வந்த ரமேஷின் நண்பா் பாலாஜியையும் தாக்கினா். இதில் காயமடைந்த பாலாஜி விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா், ரமேஷின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்தப் புகாரின் பேரில், எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கா், ராஜேஷ், முத்துப்பாண்டி, பிரியா, மணிசங்கா் ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.