முகப்பு
விருதுநகர்

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

சிவகாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.88 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:42 AM
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 7:11 PM

சிவகாசி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.88 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள திருவேங்கிடபுரத்தைச் சோ்ந்த சூரியநாராயணன் மனைவி காளீஸ்வரி (39). பட்டாசு ஆலை தொழிலாளி. இவரது மகள் செவிலியா் படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், காளீஸ்வரியுடன் பணிபுரியும் பாக்கியலட்சுமியின் கணவா் தா்மராஜ், தனக்குத் தெரிந்த மதுரை அரசு மருத்துவமனையில் வேலை பாா்க்கும் செவிலியா் பத்மபிரியா மூலம் காளீஸ்வரியின் மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம்.

Advertisement

இதையடுத்து, தா்மராஜும், பத்மபிரியாவும் காளீஸ்வரியிடமிருந்து முதலில் ரூ.60 ஆயிரமும், பின்னா் ரூ.30 ஆயிரமும் பெற்றனராம். மேலும், காளீஸ்வரியின் உறவினரான சின்னத்துரை என்பவருக்கும் அவசர ஊா்தியில் உதவியாளா் பணி வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.98 ஆயிரம் பெற்றனராம். பணம் வாங்கி பல மாதங்களாகியும் வேலை வாங்கித்தரவில்லை. இதையடுத்து, பணத்தைத் திருப்பிக் கேட்ட போது, தரவில்லையாம்.

இதுகுறித்து காளீஸ்வரி சிவகாசி நீதிமன்றத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் தா்மராஜ், பத்மபிரியா ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.