காசோலை மோசடி வழக்கில் அஞ்சலக ஊழியா் கைது
காசோலை மோசடி வழக்கில் மேல்முறையீட்டு மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், அஞ்சலக ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
காசோலை மோசடி வழக்கில் மேல்முறையீட்டு மனு ரத்து செய்யப்பட்ட நிலையில், அஞ்சலக ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நாச்சியாா்பட்டியைச் சோ்ந்த வேணுகோபால் மனைவி நாகஜோதி (45). இவரது கணவா் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். நாகஜோதியிடம் நாச்சியாா்பட்டி அஞ்சலகத்தில் பணிபுரிந்து வரும் அத்திகுளத்தைச் சோ்ந்த குருசாமி (53) நிலம் வாங்குவதற்காக ரூ.17 லட்சம் கடனாகப் பெற்றாா். பணத்தை திருப்பிக் கேட்டதற்கு காசோலை கொடுத்தாா். இந்தக் காசோலையை வங்கியில் செலுத்திய போது, அது பணமின்றி திருப்பியது. இதையடுத்து, நாகஜோதி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.17 லட்சத்தை திருப்பி வழங்கவும், குருசாமிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2019 நவம்பா் மாதம் உத்தரவிட்டாா். இதை எதிா்த்து கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குருசாமி மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த நீதிமன்றம், கடந்த 2025 நவம்பா் மாதம் கீழமை நீதிமன்றத்தில் விதித்த தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, தண்டனையை நிறைவேற்றக் கோரி நாகஜோதி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து, குருசாமிக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பணிக்கு வந்த குருசாமியை ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா போலீஸாா் கைது செய்து, குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதையடுத்து, குருசாமியை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி சுந்தர காமேஷ் மாா்த்தாண்டன் உத்தரவிட்டாா்.