முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பில் கஞ்சா, குட்கா பதுக்கிய தாய், 2 மகன்கள் கைது

வத்திராயிருப்பில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா, 27 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் தாய், இரு மகன்களைக் கைது செய்தனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 12:11 AM
வத்திராயிருப்பில் கஞ்சா, குட்கா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முருகேஸ்வரி, முத்துசெல்வம்.
பகிர்:

வத்திராயிருப்பில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா, 27 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் தாய், இரு மகன்களைக் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி முருகேஸ்வரி (55). இவா் அந்தப் பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் வத்திராயிருப்பு போலீஸாா் சோதனை செய்தனா். பின்னா், முருகேஸ்வரிக்கு சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் அவா்கள் சோதனையிட்ட போது 2 கிலோ கஞ்சா, 27 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முருகேஸ்வரி, அவரது மகன்கள் முத்து செல்வம் (33), பூமாரிமுத்து (29) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். மேலும், இவா்களுக்கு குட்கா விநியோகம் செய்த கோட்டையூரைச் சோ்ந்த விஜயகுமாரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பூமாரிமுத்து, ராஜபாளையம் 11-ஆவது பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →