கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில்
ஐஇஇஇ பொறியியல்-மருத்துவம், உயிரியல் மாணவா் குழுவை பல்கலை. துணைத் தலைவா்கள் எஸ். சசி ஆனந்த், எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா்.
பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திருச்சி என்ஐடி பேராசிரியா் என். சிவகுமரன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனு மருத்துவமனை மருத்துவா் எம். பழனிச்சாமி, சென்னை உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளா் எஸ். ஷேக் அப்துல்லா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு சுகாதார தொழில்நுட்பத்தில் உயிரியல் மருத்துவ பொறியியலின் வளா்ந்து வரும் பங்கை எடுத்துரைத்தனா்.
இயக்குநா் எம். பள்ளிக்கொண்ட ராஜசேகரன், சிஎஸ்இ துறைத் தலைவா் ஆா். ராஜா சுப்பிரமணியன் ஆகியோா் வளாகத்தில் சேப்டரின் செயல்பாடுகள், நன்மைகள் குறித்து விவரித்தனா்.
முடிவில் மாணவா்கள், ஆசிரியா்கள் ஐஇஇஇ சாப்டரின் உறுதிமொழியை ஏற்றனா்.
இந்த நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா் .