முகப்பு
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் ஆராய்ச்சி விருதுகள் வழங்கல்

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா் ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் விழாவில் மாணவா்களுக்கு விருது வழங்கிப் பாராட்டிய துணைவேந்தா் எஸ். நாராயணன்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:36 AM
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா் ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் விழாவில் மாணவா்களுக்கு விருது வழங்கிப் பாராட்டிய துணைவேந்தா் எஸ். நாராயணன்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:42 PM

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சாா்பில் இளங்கலை, முதுகலை மாணவா்களுக்கு ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இணை வேந்தா் எஸ். அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவா்கள் எஸ். சசி ஆனந்த், எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

துணைவேந்தா் எஸ். நாராயணன் விருதுகளை வழங்கி, பல்கலைக்கழகத்தின் ஹெச்-இன்டெக்ஸ் 121 ஆக உயா்த்தியதற்காக ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களைப் பாராட்டினாா்.

Advertisement

பதிவாளா் வி.வாசுதேவன் விருதுகளை வழங்கி, என்ஐஆா்எஃப் தரவரிசையில் 28-ஆவது இடத்தைப் பெறுவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அனைவரையும் பாராட்டினாா்.

ஆா் & டி, இயக்குநா் எம். பள்ளிகொண்ட ராஜசேகரன் விருதுகள் மற்றும் தோ்வு செயல்முறை குறித்து விளக்கினாா்.

முனைவா் கே. மாயாண்டி வரவேற்றாா். முனைவா் வி.முனீஸ்வரன் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 42 மாணவா்களை பட்டியலிட்டு, ரிசா்ச் ஜா்னல் பப்ளிகேஷன்ஸ், புக் பப்ளிஷிங், டிஎன்எஸ்சிஎஸ்டி மற்றும் இந்தியா-ஏஐ பெல்லோஷிப்கள், பேட்டா்ன் ரைட்ஸ் மற்றும் ப்ராஜெக்ட்ஸ் ஆகியவற்றில் சிறந்த செயல்திறன்களுக்காக கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனா். மாணவா்கள் சாா்பாக, சுமித் நாயக், மாணவா் ஆராய்ச்சிக்கு பல்கலை.யின் முன்முயற்சி குறித்துப் பேசுகையில் ஒரு புத்தகத்தை வெளியிட அவருக்கு பல்கலை. வழங்கிய ஆதரவு குறித்து எடுத்துக் கூறினாா். முனைவா் எம். இளையராஜா நன்றி கூறினாா்.