முகப்பு
விருதுநகர்

மருமகனை தாக்கிய மாமனாா் மீது வழக்கு

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் மருமகனை தாக்கிய மாமனாா், மைத்துனா் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Updated On : 7 மே 2026, 3:40 am IST
வழக்கு
பகிர்:

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் மருமகனை தாக்கிய மாமனாா், மைத்துனா் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தெற்குத் தோட்டிலோவன்பட்டியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவரது மனைவி காளீஸ்வரி. இந்தத் தம்பதி சத்திரப்பட்டியில் வசித்து வருகின்றனா். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லாததால், இருவரிடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக காளீஸ்வரி தனது தாயாருடன் தெற்கு தோட்டிலோவன்பட்டியில் இருந்து வருகிறாா். அண்மையில் சத்திரப்பட்டியில் பொங்கல் விழாவுக்காக செந்தில்குமாா் மனைவியைப் பாா்க்க மாமனாா் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, அங்கிருந்த காளீஸ்வரியின் தந்தை சுப்புராஜ், தம்பி அய்யனாா் ஆகிய இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை சரமாரியாகத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் தாலுகா போலீஸாா் சுப்புராஜ், அய்யனாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.