சிவகாசி சுற்றுவட்டச் சாலை பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி சுற்றுவட்டச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
சிவகாசி சுற்றுவட்டச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் திருநெல்வேலி கோட்ட நெடுஞ்சாலை மூலம் நகருக்கு வெளியே சுற்றுவட்டச் சாலை இரண்டாம் கட்டப் பணியானது 6.7 கி.மீ. நீளத்துக்கு ரூ.58.50 கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியின் தரம் , உறுதித்தன்மை, கட்டுமானம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.இளம்வழுதி தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
Advertisement
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் லிங்குசாமி, உதவி கோட்டப் பொறியாளா்கள் தா்மராஜா, கணேஷ் குமாா், செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.