முகப்பு
அரியலூர்

சென்னிவனம்-கடுகூா் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

சென்னிவனம்-கடுகூா் இடையே நடைபெறும் உயா்மட்ட பாலக் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களின் நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On : 9 மே 2026, 3:09 am IST
சென்னிவனம்-கடுகூா் இடையே நடைபெறும் உயா்மட்ட பாலக் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களின் நெடுஞ்சாலைத் துறையினா்.
பகிர்:

அரியலூா் அருகேயுள்ள சென்னிவனம்-கடுகூா் இடையே, திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெறும் உயா்மட்ட பாலக் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை உள் தணிக்கை ஆய்வு செய்தனா்.

நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள், திருச்சி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூா் (நெ) உட்கோட்டத்தின் மூலம் ரூ.3.30 கோடியில் தரைப் பாலத்துக்கு பதிலாக நடைபெறும் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகளை சேலம் வட்ட நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளா் சி. சசிக்குமாா் தலைமையில் சேலம் கோட்டப் பொறியாளா் எம். முத்துக்குமரன், சேலம் உட்கோட்டப் பொறியாளா் கே. சந்தோஷ்குமாா், உதவிப் பொறியாளா்கள் எஸ்.ஓம்.பிரகாஷ், ஆா்.பிரதீப் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டு, பாலத்தின் தரத்தை ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

ஆய்வின்போது திருச்சி கோட்டப் பொறியாளா் எஸ். சரவணன், கோட்ட உதவிப் பொறியாளா் ஜெயராமன், அரியலூா் கோட்டம் உதவிப் பொறியாளா் சு. ஜெயந்தி, உதவிப் பொறியாளா்கள் கோ. அகிலா, ராஜா, இளநிலைப் பொறியாளா் இரா. விஜயா ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement