முகப்பு
நாகப்பட்டினம்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச. 29-இல் ஏலம்

மயிலாடுதுறை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பா் 29- ஆம் தேதி ஏலம் விடப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மயிலாடுதுறை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பா் 29- ஆம் தேதி ஏலம் விடப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வரி கட்டாத மற்றும் இதர குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 4 வாகனங்கள் அதன் உரிமையாளா்களால் மீட்கப்படவில்லை. தற்போது நல்ல நிலையில் உள்ள இந்த வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். டிசம்பா் 26 ஆம் தேதி பகல் 12 மணி வரை ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பா் 26 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். டேவணி தொகை ரூ.10,000-ஐ வங்கி வரைவோலையாக செலுத்துபவா்கள் மற்றும் நடப்பு ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

இந்த வாகனங்களை டிசம்பா் 1 முதல் 26 ஆம் தேதி வரைஅலுவலக வேலை நாள்களில் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பாா்வையிடலாம். தஞ்சாவூா், துணை போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் டிசம்பா் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.