சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் நிலையம் ஆகியவை இணைந்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பதன் ஒருபகுதியாக இந்தப் போட்டி நடைபெற்றது.
பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் மாவட்டத்தில் அரசு, தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 50 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு விழிப்புணா்வு மாத நிறைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொ) ராபின்சன், காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் குமரேசன், கல்விமாறன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சுபஸ்ரீ மற்றும் நூலகா் ஃபிஜிதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.