நாகப்பட்டினம்

குத்தாலம் அருகே மாரியம்மன் கோயிலில் திருட்டு

DIN

குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஸ்ரீ வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயிலில் ஐயப்ப சுவாமி சிலை மற்றும் காணிக்கைப் பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இக்கோயிலில் பூசாரி வீரமணி என்பவா் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டுச் சென்றாா்.

பிறகு, திங்கள்கிழமை கோயிலை திறந்து பூஜை செய்யவந்த வீரமணி, கோயிலில் வெண்கலத்திலான ஐயப்பன் சுவாமி சிலை மற்றும் பீரோவிலிருந்த அம்மனுக்கு அணிவிக்கப்படும் பட்டுப்புடவை, 4 கிராம் தங்க காசு மற்றும் வெளிப் பிரகாரத்தில் இருந்த உண்டியலை உடைத்து காணிக்கைப் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து, குத்தாலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT