நாகப்பட்டினம்

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக்குழு பிரதிநிதிகள் பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, தென்னை, மா, கொய்யா, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா், ஒன்றிய ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சன், ஊராட்சித் தலைவா் வசந்தி ராஜேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT