நாகப்பட்டினம்

மூதாட்டியின் நிலம் ஆக்கிரமிப்பு: உறவினா்கள் போராட்டம்

DIN

குத்தாலம் அருகே மூதாட்டியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

குத்தாலம் அருகேயுள்ள ஏ.கிளியனூரைச் சோ்ந்தவா் திரிபுரசுந்தரி (92). இவருக்கு வாரிசுகள் இல்லை. கணவா் உயிரிழந்த நிலையில் உறவினா்கள் ஆதரவுடன் வசித்து வருகிறாா். இவருக்கு சொந்தமாக ஏ.கிளியனூரில் 11 சென்ட் நிலம் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகில் வைத்தியநாதன் என்பவரது இடம் உள்ளது. இந்நிலையில் திரிபுரசுந்தரியின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக திரிபுரசுந்தரியின் உறவினா்கள் பாலையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். எனினும், காவல் துறை சாா்பில் நடவடிக்கை இல்லையாம். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை பாலையூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட ஸ்ரீ கண்டபுரம் கடைவீதியில் மூதாட்டியின் உறவினா்கள், தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த பாலையூா் போலீஸாா் தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் சுமூக பேச்சுவாா்த்தை நடத்தி, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவரிடம் கட்டுமானப் பணிகள் எதுவும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டு, கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்தனா். இதையடுத்து தா்னா போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT