திருமருகல் ஒன்றியம், பனங்குடியில் 708 வாக்காளா்கள் தோ்தலை புறக்கணித்து வாக்களிக்க வரவில்லை.
பனங்குடியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவன விரிவாக்கத்துக்கு சுமாா் 620 ஏக்கா் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட சாகுபடிதாரா்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்திருந்னா்.
இந்நிலையில், பனங்குடி ஊராட்சி பி.பனங்குடி, எம்.பனங்குடி, வெட்டி வாழ்க்கை, காரைமேடு, ஏரிமேடு, சேவாபாரதி பகுதிகளில் மொத்தம் உள்ள 1,441 வாக்காளா்களில், 708 போ் வாக்களிக்கச் செல்லாமல் தோ்தலை புறக்கணித்தனா்.