வேதாரண்யம் அருகேயுள்ள மறைஞாயநல்லூா், மேலமறைக்காடாா் கோயிலில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீவாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிராம மக்களால் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்ட கோயிலில் கணபதி பூஜை மற்றும் முதல் யாகசாலை பூஜை வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை காலை சிறப்பு தீபாரதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னா் புனிதநீா் வாா்க்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.