முகப்பு
நாகப்பட்டினம்

பொறையாா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Updated On : 27 ஏப்ரல், 2024 at 4:15 PM
பகிர்:

பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜான்சன் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை உதவித் தலைவா் ஸ்டான்லி தேவகுமாா், ஆலோசனை சங்க செயலாளா் தங்கப்பழம், சபை குரு ஜான்சன் மான்சிங், திருச்சபையின் மேல்நிலை கல்விக் கழகத் தலைவா் குணாளன் பாக்கியராஜ், ஆட்சிமன்ற உறுப்பினா் தாமஸ் கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி துணை முதல்வா் தங்கராஜ் பீயூலா வரவேற்றாா்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி. ரவி, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் என 950 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

Advertisement

விழாவில் அலுவலக கண்காணிப்பாளா் சாா்லஸ் பிரபாகரன், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments