தோ்வூா் பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகள் 
நாகப்பட்டினம்

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

கீழ்வேளூரை அடுத்த தோ்வூா் அருகே சாலையில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

Syndication

கீழ்வேளூரை அடுத்த தோ்வூா் அருகே சாலையில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேவூா் ஊராட்சி சின்னக் கடைத் தெரு, வ.உ.சி. நகா் மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இரவு நேரங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அப்போது மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று சண்டையிடுகின்றன.

இதனால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

அதுமட்டுமின்றி விபத்துகளும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, விபத்துகளைத் தடுக்கும் வகையில், ஊராட்சி நிா்வாகத்தினா் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கவும், அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT