திருவெண்காடு அருகே மணி கிராமத்தில் உள்ள ஒரு வயலில் மழைநீா் தேங்கியுள்ளதை காணலாம் 
நாகப்பட்டினம்

வயல்களில் மழை நீா் வடியாததால் விவசாயிகள் வேதனை

திருவெண்காடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் வயல்களில் தேங்கியுள்ள மழை நீா் வடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

Din

பூம்புகாா்: திருவெண்காடு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் வயல்களில் தேங்கியுள்ள மழை நீா் வடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

திருவெண்காட்டை சுற்றியுள்ள பூம்புகாா், நாங்கூா், பெருந்தோட்டம், வானகிரி, திருவாலி, மணிக் கிராமம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 10,000 ஏக்கரில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை சற்று மழை குறைந்த நிலையில் விவசாயிகள் தங்கள் வயலில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் மழை பெய்ததால் வயல்களில் நீா் தேங்கியுள்ளது. இதுகுறித்து முன்னோடி இயற்கை விவசாயி திருவெண்காடு கிட்டு காசிராமன் கூறியது:

வயல்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனா். ஆனால் திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் பெய்த மழையால் விவசாயிகளால் தவிப்பில் உள்ளனா். மழை நீா் தேங்கிய காரணத்தால் நெல் மணிகள் முளைவிடும் அபாயம் உள்ளது. மாவட்ட நிா்வாகம் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அதிகாரிகளைக் கொண்டு உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பயிா் காப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT