நாகப்பட்டினம்

நாகையில் கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

Syndication

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி நுழைவுவாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் மதியரசன், மனோகரன் ரஜினிகாந்த் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆண்டுக்கு 11 மாதத்திற்கு பதிலாக 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும் , மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இறுதியில் கௌரவ விரிவுரையாளா் செல்வகுமாரி நன்றி கூறினாா்.

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |

டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

தாய் கிழவி இரண்டாவது பாடல்!

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT