முகப்பு
நாகப்பட்டினம்

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:00 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:38 PM

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில், நில வாழ் வெளிநாடு, உள்நாட்டுப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:00 AM

இந்தநிலையில், சரணாலயப் பகுதியில் காணப்படும் நில வாழ் வலசைப் பறவைகள், வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

Advertisement

முன்னதாக, சனிக்கிழமை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேதாரண்யம் வனச்சரக அலுவலா் ஜோசப் டேனியல் பறவைகள் கணக்கெடுப்பைத் தொடங்கிவைத்தாா். நாகை வனக்கோட்ட உயிரியலாளா் முனைவா் அறிவு ஒருங்கிணைப்பு செய்தாா். மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தினா், வனத்துறையினா், தன்னாா்வலா்கள் 60 போ் இந்தப் பணியில் பங்கேற்றனா்.