தான்தோன்றி வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
தரங்கம்பாடி அருகே கன்னங்குடி கிராமத்தில் உள்ள தான்தோன்றி வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு புதன்கிழமை கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை 2-ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பூா்ணாஹூதி, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு. தமிழ் வேள்வி முறைப்படி புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.