காரைக்காலில் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த 2 குரங்குகளை வனத் துறையினர் சனிக்கிழமை பிடித்தனர்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு பகுதியில் குடியிருப்புகள் உள்ள இடத்தில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரி எஸ். தண்டாயுதபாணி தலைமையிலான ஊழியர்கள் புகார் தெரிவிக்கப்பட்ட கிராமத்துக்கு சென்று பல இடங்களில் பழங்களை வைத்து கூண்டு அமைத்திருந்தனர். இதில் 2 குரங்குகள் பிடிபட்டன.