காரைக்கால்

திருப்பட்டினம் அருகே ஆண் சடலம் மீட்பு

DIN

திருப்பட்டினம் வாஞ்சூர் பகுதியில்  ஆண் சடலத்தை போலீஸார் மீட்டுள்ளனர்.
இதுகுறித்து திருப்பட்டினம் காவல்நிலைய அலுவலர் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
திருப்பட்டினம் பகுதி கீழவாஞ்சூர் சாராயக் கடை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண்  இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு பொதுமருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.
உயிரிழந்தவர் பெயர் உள்ளிட்ட விவரம் தெரியவில்லை. உயரம் 5.5 அடி, மெலிந்த உடல்,  தலையின் முன் பகுதி வழுக்கை.  வெள்ளை நிற கோடு போட்ட முழுக்கை சட்டையும், பச்சை நிற வேட்டியும் அணிந்திருந்தார். இவரது  இடது பக்க மார்பில் மச்சம், மூக்கின் இடதுபுறத்தில் பழைய காயத் தழும்பு உள்ளது.  
விவரம் தெரிந்தோர் திருப்பட்டினம் காவல்நிலையத்தை 04368-233480 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT