காரைக்கால்

நில அளவைத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

DIN

காரைக்கால் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் நிலவும் காலிப் பணியிடங்களை விரைவாக புதுச்சேரி அரசு நிரப்பவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சோஷியல் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (எஸ்.யு.சி.ஐ) கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஜெ.முகம்மது பிலால் புதுச்சேரி நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:  
காரைக்கால் நில அளவைத் துறையில் பல ஆண்டுகளுக்கு முன்பு 20 பேர் வரை பணியாற்றினர். பலர் ஓய்வு பெற்று சென்று விட்ட நிலையில், தகுதியான நில அளவையர்கள் பலர் இருந்தும், அவர்களுக்கு உரிய பதவி உயர்வு தரப்படாமலும், துணை அளவையர்கள் நியமிக்காத போக்கால் மாவட்டம் முழுவதும் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
எதிர்வரும் காலங்களில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு நில அளவீட்டாளர்கள் வழங்கும் வரைபடம் மிக முக்கிய ஆவணமாக கருதப்படவுள்ளதால், காரைக்காலில் இந்த துறையில் நிலவும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT