காரைக்கால்

அதிகமாக மது குடித்தவர் சாவு

DIN

காரைக்கால் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்  வடக்கு பால்பண்ணைச்சேரியைச் சேர்ந்தவர் சண்முகம் (50). இவர், காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூர் பகுதியில் உள்ள மதுக்கடையொன்றில் சனிக்கிழமை அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, சாலையோரத்தில் நடந்து சென்றபோது, நிலைதடுமாறி விழுந்தாராம்.
அவர், நீண்ட நேரமாக அசைவின்றி கிடந்ததால், அப்பகுதியில் உள்ளவர்கள் திருப்பட்டினம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார், சண்முகத்தை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சண்முகம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, திருப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT