காரைக்கால்

வேளாண் துறை ஊழியர் மர்மச் சாவு

DIN

காரைக்காலில் வேளாண் துறை ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரைக்கால் நேரு நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (48). இவர், வேளாண் துறை அலுவலகத்தில் மஸ்தூராகப் பணியாற்றிவந்தார். சனிக்கிழமை இரவு அவரது தாயாரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்ற ராமச்சந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT