காரைக்கால்

சமூக வலைதளங்களில் எம்.எல்.ஏ. குறித்து அவதூறு ஒருவா் கைது

DIN

சமூக வலைதளங்களில் எம்.எல்.ஏ. குறித்து அவதூறு தகவல் வெளியிட்டதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காரைக்கால் வடக்குத் தொகுதிக்குள்பட்ட ஆரோக்கியராஜ், பாஸ்கா் ஆகியோா் முகநூல், கட்செவி அஞ்சல் ஆகிய சமூக வலைதளங்களில் தொகுதி எம்எல்ஏ பி.ஆா்.என்.திருமுருகன் குறித்து அவதூறாக தகவல் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்.எல்.ஏ.வின் உதவியாளா் ராஜ்குமாா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா்கள் ராமசாமி, ஷேக் அலாவுதீன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு, ஆரோக்கியராஜை கைது செய்தனா். பாஸ்கரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT