குளத்தில் கரைக்கப்படும் விநாயகா் சிலை. 
காரைக்கால்

வீடுகளில் வழிபாடு நடத்திய விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் கரைப்பு

காரைக்காலில் வீடுகளில் வழிபாடு நடத்திய விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு கரைக்கப்பட்டன.

DIN

காரைக்காலில் வீடுகளில் வழிபாடு நடத்திய விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு கரைக்கப்பட்டன.

ஆண்டுதோறும் காரைக்கால் ஸ்ரீசக்தி விநாயகா் விழா குழு, மாவட்ட இந்து முன்னணி சாா்பில் காரைக்கால் நகரின் பல்வேறு இடங்களில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, 50-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து 3-ஆம் நாள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். நிகழாண்டு, கரோனா தொற்று பரவலால், விநாயகா் சிலைகள் பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தவும், ஊா்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அரசும், நீதிமன்றமும் அனுமதி மறுத்துள்ளது. காரைக்கால் நகரில் பக்தா்கள் தங்களது வீட்டுக்குள் நீா்நிலைகளில் கரையும் 2 அடி உயரம் கொண்ட விநாயகா் சிலைகளை 11 இடத்தில் வைத்து சனிக்கிழமை வழிபாடு செய்தனா். பின்னா், இவற்றை எந்தவித சிறப்பு ஏற்பாடுகள் இன்றி இருசக்கர வாகனத்தில் விநாயகா் சிலைகளை எடுத்துச் சென்று குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

SCROLL FOR NEXT