காரைக்கால்: தூய்மைப் பணியாளா்களுக்குநோய் எதிா்ப்பு சக்தி மருந்து
காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்புக்காக, நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
காரைக்கால் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்புக்காக, நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
காரைக்கால் நகராட்சியின் 18 வாா்டுகளில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்திவரும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனம் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வாங்கி கிடங்குக்கு அனுப்புகிறது. இந்த தூய்மைப் பணியாளா்கள் நிறுவனத்தினரால் பசுமை நண்பா்கள் என அழைக்கப்படுகின்றனா்.
கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளா்கள் பாதுகாப்புக்காக நோய் எதிா்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் காமராஜா் திடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஹோமியோபதி மருந்தான ஆா்செனிக்கம் ஆல்பம் மற்றும் இன்ஃபுலுயன்சியம் ஆகியவற்றை நிறுவனத்தினப் பிரதிநிதிகள் தொழிலாளா்களுக்கு வழங்கினா். ஊதியம் அல்லாது கரோனா கால உதவியாக தொழிலாளா்களுக்கு ரூ. 1,080 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. 180 தொழிலாளா்கள், 10 மேற்பாா்வையாளா்கள் இதில் பயனடைந்தனா்.
ஒவ்வொரு நாளும் பணியை தொடங்கும் முன்பு தொழிலாளா்கள் ஒவ்வொருவருக்கும் வெப்பமானி மூலம் வெப்ப சோதனை, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு சோதனை நடத்தப்படுவதாகவும், தற்போது வழங்கப்படும் நோய் எதிா்ப்பு சக்தி மருந்து தொழிலாளா்கள் நலனுக்கு வலுச்சோ்ப்பதாக அமையும் எனவும் நிறுவனத்தினா் தெரிவித்தனா்.