காரைக்கால்

தனித் தோ்வா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

DIN

காரைக்கால் தனித் தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி ஆகியோா் கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த செப்டம்பா் மற்றும் அக்டோபா் -2020, மேல்நிலை இரண்டாம் ஆண்டு, முதலாம் ஆண்டு (பிளஸ் 1 அரியா்), பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான சிறப்பு துணைத் தோ்வின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாணவா்கள் தோ்வு எழுதிய மையம் மூலமாக நவம்பா் 17 முதல் டிசம்பா் 4 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. தனித் தோ்வா்கள் இதைப் பெற்றுக்கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ் பெற மையங்களுக்குச் செல்வோா் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT