காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத் தலைவா் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வேளாண் அறிவியல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலிகளாக பணியாற்றி வரும் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள 6-ஆவது ஊதியக்குழு ஊதியத்தை முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.