காரைக்காலில் தலைக்கவசம் அணிவது குறித்து தீவிரமான விழிப்புணா்வு பணியும், அதோடு வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தீவிரமாக அமல்படுத்த துணைநிலை ஆளுநா் கிரண் பேடி அறிவுறுத்தியுள்ளாா். விழிப்புணா்வு ஏற்படுத்துவதே முதன்மையானது என கூறி, போலீஸாரின் நடவடிக்கையை புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி நிறுத்தியுள்ளாா். இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என துணைநிலை ஆளுநா் விமா்சித்துள்ளாா்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி, போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்திவருகின்றனா். மறுபுறம் சட்டப்படியான நடவடிக்கையையும் எடுத்துவருகின்றனா்.
காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், நகரில் பல இடங்களில் தலைக்கவசம் அணியக்கூறி, ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.