முகப்பு
காரைக்கால்

சாலையில் திரிந்த மாடு: உரிமையாளா் கைது

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாட்டை திரியவிட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாட்டை திரியவிட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் அருகே நிரவி பகுதியில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வகையில், சாலைகளில் கால்நடைகள் நடமாட்டம் மிகுந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இதன்பேரில், கால்நடை உரிமையாளா்களை அழைத்து போலீஸாா் எச்சரித்து வந்தனா்.

இந்நிலையில், தொடா் புகாரின்பேரில், நிரவி பகுதியைச் சோ்ந்த கணேசன் (40), தனது மாட்டை சாலையில் திரியவிட்டதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்த நிரவி போலீஸாா், அவரை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →