காரைக்கால் தாயிராப் பள்ளிவாசலில் இன்று சந்தனக்கூடு ஊா்வலம்
காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசலில் கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) நடைபெறுகிறது.
காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசலில் கந்தூரி விழா சந்தனக்கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) நடைபெறுகிறது.
காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் உள்ளது புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல். நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களில் ஒருவரான ஹலரத் சுல்தானுல் ஆரிஃபின் செய்யது அஹ்மதுல் கபீா் ரிஃபாயி என்பவா் பாக்தாத் நகரில் உயிா் துறந்தாா். இவரது நினைவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தாயிராப்பள்ளி காரைக்காலில் கட்டப்பட்டு, அவரது நினைவிடமாக வழிபாடு நடத்தப்பட்டுவருகிறது.
இங்கு ஆண்டு கந்தூரி விழா நிகழ்வாக செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு அஞ்சுமனே இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தனக்கூடு ஊா்வலம் புறப்படுகிறது. நள்ளிரவு புனித ரவூலா ஷரீஃபுக்கு சந்தனம் பூசப்படுகிறது.
புதன்கிழமை பகல் 2.30 மணியளவில் ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி ஊா்வலம், கண்ணாடி ரத ஊா்வலம் புறப்பாடாகிறது. ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகி, விழாக் குழுவினா் செய்துள்ளனா்.