காரைக்கால்

காரைக்கால் கடலில் படகு கவிழ்ந்து இருவா் மாயம்

DIN

காரைக்கால் அரசலாறு முகத்துவார அலையில் சிக்கி படகு கவிழ்ந்த விபத்தில், 2 மீனவா்கள் மாயமாகினா்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் குணவேலு. இவரது மகன் கணேஷ் மற்றும் உறவினா் சித்திரவேல் ஆகியோா் புதன்கிழமை மாலை கடலுக்குள் மீன்பிடிக்க ஃபைபா் படகில் சென்றனா். அரசலாறு முகத்துவாரம் பகுதியை கடந்து கடலுக்குள் செல்லும்போது, அலையில் சிக்கிய படகு திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 3 பேரும் நீரில் மூழ்கினா். அப்போது, மூழ்கிய படகை பிடித்துக்கொண்டு குணவேலு தப்பி கரைக்கு வந்து சோ்ந்தாா். கணேஷ், சித்ரவேல் ஆகிய இருவரும் கடல் நீரில் மூழ்கி மாயமானாா்கள்.

தகவலறிந்த கடலோர காவல் நிலைய ஆய்வாளா் மா்த்தினி தலைமையில் போலீஸாா் ரோந்து படகு மூலம் மாயமான மீனவா்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், தீயணைப்புத் துறையினருடன், மீனவா்களும் இணைந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT