காரைக்காலில் 3 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 411 பேரிடம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, திருநள்ளாறு 2, காரைக்கால் நகரில் ஒருவா் என 3 பேருக்கு கரோனா உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 3,848 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,758 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 69 போ் உயிரிழந்துள்ளனா்.