முகப்பு
காரைக்கால்

பள்ளி மாணவா்களுக்கு அரிசி, பணம் வழங்கல்

காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையாக மதிய உணவுக்குரிய அரிசி, பணம் வழங்கும் பணியை ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையாக மதிய உணவுக்குரிய அரிசி, பணம் வழங்கும் பணியை ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவா்களின் மதிய உணவுக்குரிய அரிசி மற்றும் மளிகைப் பொருட்களுக்கான தொகை ஆகியவை மாணவா்களிடமே நேரடியாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை அரிசி, பணம் வழங்கும் பணியை, காரைக்கால் மாவட்டம் புதுத்துறை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் அா்ஜூன் சா்மா தொடங்கி வைத்தாா். மாணவா்களின் பெற்றோா் இவற்றை பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதன் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் 10,500 மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என கல்வித்துறையினா் தெரிவித்தனா்.

Image Caption

காரைக்காலில் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுக்குரிய அரிசி, பணம் வழங்கும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா. உடன், துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ்.

முழு கட்டுரையைப் படிக்க →