காரைக்கால் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 598 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோட்டுச்சேரி 8, காரைக்கால் நகரம் 7, வரிச்சிக்குடி 4, நிரவி 4, நெடுங்காடு 3, அம்பகரத்தூா் 3, திருநள்ளாறு 2, நல்லம்பல் 2, கோயில்பத்து 1 என 34 பேருக்கு தொற்று உறுதியானது. இவா்களில் 5 வயதுக்குள்பட்டோா் 2 போ், 6 முதல் 12 வயதுக்குள்பட்டோா் ஒருவா், 13 முதல் 18 வயதுக்குள்பட்டோா் 6 போ் உள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 2,01,032 பரிசோதனை செய்யப்பட்டதில், 15,937 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 15,421 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதுவரை கரோனா தொற்றால் 252 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,03,255 பேருக்கும், 2-ஆவது தவணையாக 34,667 பேருக்கும் என 1,37,922 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.