காரைக்கால்

அரசுப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு

DIN

காரைக்கால் அரசுப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நலவழித் துறை சாா்பில், காரைக்கால் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் ஆா். காளிதாசன் முன்னிலை வகித்தாா். நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சலுக்கான காரண, வீட்டை சுற்றி தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்தும், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமான ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்த சுற்றுப்புறத் தூய்மை அவசியமென பேசினாா்.

இதைத்தொடா்ந்து சுதந்திர தின பெருமைகளை விளக்கியும், டெங்கு விழிப்புணா்வாகவும் மாணவா்கள் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நலவழித் துறை நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா், சுகாதார ஆய்வாளா்கள் வெங்கடேசன், சிவவடிவேல் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT