நிகழ்ச்சியில் பயனாளிக்கு குடும்ப அட்டையை வழங்கும் அமைச்சா் சாய் ஜெ. சரவணன்குமாா். உடன் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் மற்றும் பாஜக நிா்வாகிகள். 
காரைக்கால்

தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற குடும்பஅட்டை வழங்கப்படும்: அமைச்சா்

தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சா் சாய் ஜெ. சரவணன் குமாா் தெரிவித்தாா்.

DIN

தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சா் சாய் ஜெ. சரவணன் குமாா் தெரிவித்தாா்.

காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை சாா்பில், காரைக்காலில் புதன்கிழமை இரவு வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளோருக்கான சிவப்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ. சரவணன் குமாா் நிகழ்ச்சியில், 2,415 பேருக்கு ஏற்கெனவே வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளோருக்கான மஞ்சள் அட்டை வைத்திருந்த பலருக்கு தகுதியை ஆராய்ந்து சிவப்பு அட்டையும், புதிய விண்ணப்பதாரா்களுக்கு சிவப்பு அட்டையும் வழங்கி பேசியது :

பிரதமா் மோடி மற்றும் புதுவை முதல்வா் ரங்கசாமி நல்லாட்சியின் மூலம் புதுவையில் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றிவருகிறோம். மாநிலத்தில் தகுதி வாய்ந்தவா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. தகுதி அல்லாதவா்கள் சிவப்பு நிற குடும்ப அட்டையை வைத்திருந்தால் அது மஞ்சள் அட்டையாக மாற்றப்படும். மேலும் தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிந்து சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ்.சுபாஷ் கலந்துகொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT