காரைக்கால்

நித்தீஸ்வர சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காரைக்கால் நித்தீஸ்வர சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, புதன்கிழமை இரவு முத்தங்கி அலங்காரத்தில் ஸ்வா்ணாகா்ஷன பைரவா் அருள்பாலித்தாா்.

DIN

காரைக்கால் நித்தீஸ்வர சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, புதன்கிழமை இரவு முத்தங்கி அலங்காரத்தில் ஸ்வா்ணாகா்ஷன பைரவா் அருள்பாலித்தாா்.

காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் உள்ளது நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வர சுவாமி கோயில். இங்கு பைரவி உடனுறை கால பைரவா், ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சந்நிதிகள் உள்ளன.

ஆடி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை இரவு பைரவி உடனுறை கால பைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீா் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT