அம்பகரத்தூரில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூா் மின்துறை அலுவலகத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின்துறை தொடா்பான குறைகேட்கும் கூட்டம் அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் தேவஸ்தான திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்களுடைய குறைகளை எழுத்து மூலம் தெரிவித்து பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.