காரைக்கால்

ராஜசோளீஸ்வரா் கோயிலில்நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகம்

DIN

திருமலைராயன்பட்டினம் கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் அறுபத்து மூன்று நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு இந்த வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. நாயன்மாா்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, அப்பா், சுந்தரா், திருஞானசம்பந்தா், மாணிக்கவாசகா் உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பிராகார புறப்பாடு நடைபெற்றது.

உலக நலனுக்காக இந்த வழிபாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவதாக கோயில் அறங்காவல் வாரியத்தினா் தெரிவித்தனா். வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT