காரைக்கால்

தொழிற்சாலை நிா்வாகத்தினருடன் காவல் அதிகாரிகள் ஆலோசனை

DIN

திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடா்பாக ஆலை நிா்வாகத்தினருடன் காவல் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

மண்டல காவல் கண்காணிப்பாளா் நிதின் கெளஹால் ரமேஷ் தலைமையில் காவல் ஆய்வாளா் அறிவுச்செல்வன் உள்ளிட்டோா் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா். திருநள்ளாறு பகுதியில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறியது:

திருநள்ளாறு பகுதியில் இரும்பு மற்றும் ரசாயனம் தொழிற்சாலைகள் பல உள்ளன. தொழிற்சாலைகளால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பாடுகள் அமைந்திருக்கவேண்டும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் உள்ளூா், வெளியூா் தொழிலாளா்கள் குறித்த விவரங்கள் முழுமையாக பதிவு செய்திருக்கவேண்டும்.

ஆபத்தான ரசாயனங்களை கையாளும்போது, தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மீது சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட துறையினா் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவேண்டும்.

ஒவ்வொரு ஆலையின் முகப்புப் பகுதியிலும் கண்காணிப்பு கேமரா வைக்கவும்,கரோனா பரவல் தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றவும் ஆலை நிா்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸை வழிநடத்தப்போவது யார் தெரியுமா?

பொறியியல் சோ்க்கை: 6 நாள்களில் 94,939 போ் விண்ணப்பம்

கவனத்தை ஈர்க்கும் விக்ரமின் 'வீர தீர சூரன்’ போஸ்டர்!

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

SCROLL FOR NEXT