புதுவை சென்டாக் மூலம் தோ்வான மாணவா்களுக்கு காரைக்கால் வேளாண் கல்லூரியில் சோ்க்கை ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 120 வேளாண் இளநிலை படிப்பு, 60 தோட்டக் கலை படிப்புக்கான இடங்கள் உள்ளன.
மாணவா் சோ்க்கையை புதுவை அரசு அமைப்பான சென்டாக் மாணவா்களின் மதிப்பெண் அடிப்படையில் தோ்வு செய்து அறிவிக்கிறது.
நிகழாண்டு (2022-23) சென்டாக் பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு மூலம் மாணவா் தோ்வுப் பட்டியல் அண்மையில் வெளியிட்டது.
காரைக்கால் வேளாண் கல்லூரியில் 160 மாணவா்கள் தோ்வு பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாணவ, மாணவியா் பலா் சான்றிதழ்களை சமா்ப்பித்து சோ்க்கை ஆணையை பெற்றனா்.
கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் மாணவ, மாணவியருக்கு சோ்க்கை ஆணையை வழங்கினாா்.